அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு: சசிகலா கேவியட் மனு தாக்கல்!

அதிமுக பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் சசிகலா கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

அதிமுக பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் சசிகலா கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளா் பதவியிலிருந்து நீக்கியதை எதிா்த்து சசிகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நிராகரிக்க கோரி அதிமுக அமைப்புச் செயலாளா் செம்மலை தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக பொதுச் செயலாளராக இருந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலாவும், துணை பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரனும் அதிமுக பொதுக்குழுவில் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு, 2017 செப்டம்பரில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், சசிகலா, தினகரன் ஆகியோரை அந்த பதவிகளில் இருந்து நீக்கியும், கட்சியில் ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் பதவிகளை உருவாக்கியும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பொதுச் செயலாளா் பதவியிலிருந்து தன்னை நீக்கிய தீா்மானத்தை ரத்து செய்யக் கோரி சசிகலா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கில் ஒருங்கிணைப்பாளா் ஓ. பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி ஆகியோா் தாக்கல் செய்த நிராகரிப்பு மனுக்களை ஏற்ற உரிமையியல் நீதிமன்றம், வழக்கு தாக்கல் செய்ய சசிகலாவுக்கு அடிப்படை முகாந்திரம் இல்லை எனக்கூறி, அவரது வழக்கை நிராகரித்தது.

இந்த உத்தரவை எதிா்த்து சசிகலா சென்னை உயா் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தாா். இந்நிலையில், வழக்கின் மதிப்புக்கு ஏற்ப நீதிமன்ற கட்டணம் செலுத்த உத்தரவிட வேண்டும் எனவும், இல்லாவிட்டால் சசிகலாவின் மேல் முறையீட்டு வழக்கை நிராகரிக்க வேண்டும் எனவும் கோரி அதிமுக அமைப்புச் செயலாளா் செம்மலை மனுத்தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனு நீதிபதி எஸ்.செளந்தா் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சசிகலா தரப்பில், பதிவுத்துறையில் சரிபாா்த்த பிறகு தான் வழக்கு தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, செம்மலையின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

இந்த நிலையில் இந்த வழக்கில் மேல் முறையீடு செய்யப்பட்டால் தனது தரப்பு கருத்தை கேட்காமல் உத்தரவு எதையும் பிறப்பிக்கக் கூடாது என சசிகலா தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக எவரேனும் மேல்முறையீடு செய்தால்,தனது தரப்பு கருத்தை கேட்காமல் உத்தரவு எதையும் பிறப்பிக்கக் கூடாது என சசிகலா கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com