கல்லூரிகளில் சேர்ந்து செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் விலகும் மாணவர்களுக்கு முழு கட்டணத்தை திருப்பியளிக்க பல்கலைக் கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது.
முழு கட்டணத்தை கல்லூரிகள் திருப்பி அளிப்பதில்லை என்ற புகாரையடுத்து பல்கலைக் கழக மானியக் குழு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் விலகும் மாணவர்களிடம் சேவைக் கட்டணமாக ரூ.1000 மட்டுமே பிடித்தம் செய்ய வேண்டும் எனவும் யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.