தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தமிழக மீனவர்கள் 22 பேரை விடுவித்தது இலங்கை நீதிமன்றம்

தமிழக மீனவர்கள் 22 பேரை நிபந்தனையுடன் இலங்கை நீதிமன்றம் புதன்கிழமை விடுதலை செய்தது.

News image
Updated On :5 ஜூலை 2023, 7:02 am

DIN

ராமேசுவரம்: தமிழக மீனவர்கள் 22 பேரை நிபந்தனையுடன் இலங்கை நீதிமன்றம் புதன்கிழமை விடுதலை செய்தது.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் இருந்து கடந்த மாதம் 22-ஆம் தேதி மீன்பிடிக்க சென்றபோது ஒரு விசைப்படகு, தேவா, நடராஜன், நாகராஜன், சந்தியா, ஷிப்ரான் ஆகிய 5 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.

Story image

இதே போன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 17 மீனவர்கள், மூன்று விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். ஒரே நாளில் நான்கு விசைப்படகுகள் 22 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட நிலையில் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Story image

இந்த நிலையில், இன்று புதன்கிழமை ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 5 ஆண்டுகளுக்குள் மீண்டும் கைது செய்யப்பட்டால் விடுதலை செய்யப்படாது என எச்சரித்து 22 மீனவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டனர்.

இருப்பினும், அவர்களின் 4 படகுகளையும் விடுவிக்க மறுத்துவிட்டனர்.

Story image

இதனைதொடர்ந்து, விடுதலை செய்யப்பட்ட 22 மீனவர்களும் யாழ்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். ஓரிரு நாள்களில் நாடு திரும்பவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.