தூத்துக்குடி: தூத்துக்குடி அருள்மிகு வரத விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் அமைச்சர் கீதா ஜீவன் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
தூத்துக்குடியில், இரண்டாம் கேட் ரயில்வே பகுதியில் இருந்த அருள்மிகு ஸ்ரீ வரத விநாயகர் திருக்கோயில் இட்டை ரயில் பாதை போடப்பட்டதன் காரணமாக அங்கிருந்து அகற்றப்பட்டு கதிரேசன் கோயில் தெரு பகுதியில் புதிதாக கட்டபட்டது. இந்த ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா புதன்கிழமை காலையில் நடைபெற்றது.

கும்பாபிஷேக நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன்.
முன்னதாக, கணபதி ஹோமம், யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து புனித நீர் கலசங்களில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பின்பு கோபுர கலசங்களுக்கு சிறப்பு பூஜைக்குப் பின்பு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. பின்னர் கோபுர கலசங்கள் மற்றும் விநாயகருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள்.
இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், திமுக நகரச் செயலர் ஆனந்த சேகரன் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து ஸ்ரீ வரத விநாயகரை வழிபட்டு சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

திருச்சி கிழக்கு செல்கிறார் விஜய்! இன்றைய செய்திகள் மே 30 - நேரலை!

திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைது!

தீபாவளி வெளியீடாக சூர்யா - 47?
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



