தூத்துக்குடி: தூத்துக்குடி அருள்மிகு வரத விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் அமைச்சர் கீதா ஜீவன் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
தூத்துக்குடியில், இரண்டாம் கேட் ரயில்வே பகுதியில் இருந்த அருள்மிகு ஸ்ரீ வரத விநாயகர் திருக்கோயில் இட்டை ரயில் பாதை போடப்பட்டதன் காரணமாக அங்கிருந்து அகற்றப்பட்டு கதிரேசன் கோயில் தெரு பகுதியில் புதிதாக கட்டபட்டது. இந்த ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா புதன்கிழமை காலையில் நடைபெற்றது.

கும்பாபிஷேக நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன்.
முன்னதாக, கணபதி ஹோமம், யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து புனித நீர் கலசங்களில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பின்பு கோபுர கலசங்களுக்கு சிறப்பு பூஜைக்குப் பின்பு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. பின்னர் கோபுர கலசங்கள் மற்றும் விநாயகருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள்.
இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், திமுக நகரச் செயலர் ஆனந்த சேகரன் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து ஸ்ரீ வரத விநாயகரை வழிபட்டு சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பழனி கோயில் நில மோசடி வழக்கு சிபி-சிஐடிக்கு மாற்றம்: தமிழக அரசு

தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக பணீந்திர ரெட்டி நியமனம்!







