ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திருப்பூர் அருகே கன்டெய்னர் லாரியில் தீ: ரூ.15 லட்சம் மதிப்பிலான நூல்கள் சேதம்

திருப்பூரை அடுத்த செங்கப்பள்ளி அருகே கன்டெய்னர் லாரியில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான நூல் பேல்கள் எரிந்து சேதமடைந்தன.

News image
Updated On :7 ஜூலை 2023, 8:10 am

DIN

திருப்பூரை அடுத்த செங்கப்பள்ளி அருகே கன்டெய்னர் லாரியில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான நூல் பேல்கள் எரிந்து சேதமடைந்தன.

ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த கன்டெய்னர் லாரி ஓட்டுநர் ஆரிப்கான் (30), இவர் அங்குள்ள ஒரு நிறுவனத்தில் இருந்து நூல் பேல்களை கடந்த ஜூன் 30 ஆம் தேதி லாரியில் ஏற்றியுள்ளார். இந்த நூல் பேல்களை பெருமாநல்லூரியில் உள்ள நாகேந்திரன் என்பவருக்குச் சொந்தமான டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் இறக்குவதற்காக வந்து கொண்டிருந்தார். 

இந்த வாகனம் கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் செங்கப்பள்ளி அருகே வெள்ளிக்கிழமை காலை 9 மணி அளவில் வந்தபோது லாரியில் இருந்து கரும்புகை வந்துள்ளது. இதனால் ஆதிர்ச்சியடைந்த ஆரிப்கான் வாகனத்தை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு ஊத்துக்குளி தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் கொடுத்துள்ளார். 

இதன்பேரில் ஊத்துக்குளி, அவிநாசி, திருப்பூர் வடக்கு, பெருந்துறை ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டு 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில், ஒரு வழியாக இரண்டரை மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். எனினும் லாரியில் இருந்த ரூ.15 லட்சம் மதிப்பிலான நூல் பேல்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. இந்த தீ விபத்து குறித்து ஊத்துக்குளி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Story image

திருப்பூர் குளத்துப்புதூர் பகுதியில் உள்ள சாய ஆலையில் பாய்லர் வெடித்து வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. திருப்பூர் குளத்துப்புதூர் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான சாய ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் உள்ள பாய்லரில் இருந்த ஆயில் சூடாகியதால் பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், பல அடி தொலைக்கு தீ மேல் எழும்பியுள்ளது. 

இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த திருப்பூர் தெற்கு தீயணைப்புத் துறையினர் தீ அணைக்கும் பணியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.