
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் உரங்கள் வழங்கப்பட்டன.
வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் குறுவை சாகுபடிக்கு 100 சதவீத மானியத்தில் உரங்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு கலந்து கொண்டு விவசாயிகளுக்கு மானிய உரங்களை வழங்கினர். திருச்சி மாவட்டத்துக்கு இத்திட்டத்துக்கு ரூ.1.60 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.