சென்னை கோயம்பேட்டில் தக்காளி விலை ரூ.10 அதிகரித்து ரூ.130 விற்பனை செய்யப்படுகிறது.
நாட்டின் ஒரு சில பகுதிகளில் கனமழை, கடந்த சில மாதங்களில் வெப்பம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் நாடு முழுவதும் தக்காளி விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது.
சென்னைக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளதால், கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கடுமையாக உயா்ந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது தக்காளி வரத்து 30 சதவீதம் வரை குறைந்துள்ளதால், அதன் விலை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இன்று மீண்டும் தக்காளி விலை உயர்ந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை ரூ.10 அதிகரித்து ரூ.130 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதே போல சிறிய தக்காளியின் கிலோ ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க: 6 மாதங்களாக தினமும் தூக்க மாத்திரை எடுத்துக் கொண்ட கோவை டிஐஜி!
நேற்று, கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி மொத்த விலையில் ரூ.30 அதிகரித்து ரூ.120 வரை விற்பனையானது. சில்லறை விலையில் ரூ.130-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.