தாராபுரத்தில் சக்கரை மைதீனுக்கு நினைவஞ்சலி!

தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் திராவிட இயக்கத்தை வளர்த்த எஸ்.வி.சக்கரை மைதீனுக்கு இன்று (ஜூலை 9) திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
எஸ்.வி.சக்கரை மைதீனுக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்றோர்.
எஸ்.வி.சக்கரை மைதீனுக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்றோர்.
Published on
Updated on
1 min read

தாராபுரம்: தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் திராவிட இயக்கத்தை வளர்த்த எஸ்.வி.சக்கரை மைதீனுக்கு இன்று (ஜூலை 9) திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் திராவிட இயக்கத்தை வளர்த்த எஸ்.வி.சக்கரை மைதீனின் 36 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, தாராபுரத்தில் உள்ள தந்தை பெரியார் சிலை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நகர்மன்றத் தலைவர் கு.பாப்புகண்ணன் தலைமையில், மைதீனின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் திமுக கட்சியின் தாராபுரம் நகரச் செயலாளர் எஸ்.முருகானந்தம், தலைமை செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.தனசேகர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் தமிழ்முத்து, நகைச்சுவை நடிகர் சாப்ளின் பாலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com