அமுதம் பல்பொருள் அங்காடியில் நாளை முதல் துவரம் பருப்பு விற்பனை

சென்னையில் உள்ள அமுதம் பல்பொருள் அங்காடிகள் மற்றும் அமுதம் நியாய விலைக் கடைகளில் கொள்முதல் விலைக்கு தக்காளி உள்பட அத்தியாவசிய பொருட்கள் நாளை முதல் விற்பனை செய்யப்படும் என அறிவிப்பு.
அமுதம் பல்பொருள் அங்காடியில் நாளை முதல் துவரம் பருப்பு விற்பனை
Updated on
1 min read

சென்னையில் உள்ள அமுதம் பல்பொருள் அங்காடிகள் மற்றும் அமுதம் நியாய விலைக் கடைகளில் கொள்முதல் விலைக்கு தக்காளி உள்பட அத்தியாவசிய பொருட்கள் நாளை முதல் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி தக்காளி ஒரு கிலோ ரூ.60க்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அத்தியாவசிய பொருட்களான துவரம் பருப்பு 500 கிராம் ரூ.75க்கும், உளுத்தம் பருப்பு 500 கிராம் ரூ.60க்கும் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்களின் நலன் கருதி உணவுத்துறை சார்பில் கொள்முதல் விலைக்கு அத்தியாவசிய பொருள்களை விற்க முடிவு செய்யப்பட்டது. அரசின் இந்த முடிவுக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com