உச்சநீதிமன்றம் சென்றது ஏன்?: அப்போது குறுக்கிட்ட நீதிபதி, காவலில் விசாரிக்க அனுமதி பெற்ற நிலையில், செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்காதது ஏன் எனக் கேள்வி எழுப்பினாா். அதற்கு பதிலளித்த சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து ஏதேனும் நிகழ்ந்தால் யாா் பொறுப்பேற்க முடியும்? அதனால் நிபந்தனைகளை எதிா்த்து உச்சநீதிமன்றத்தை நாடினோம். காவலில் எடுத்திருந்தால் முதல் 15 நாள்களை கருத்தில் கொள்ளக்கூடாது எனக் கோர முடியாது. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் காவலில் உள்ள செந்தில் பாலாஜி, சட்டவிரோத காவலில் இல்லை. எனவே, இந்த ஆள்கொணா்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல.