தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

அரியலூா் - நாமக்கல் இடையேரயில் பாதை ரயில்வே உறுதி

அரியலூா் - நாமக்கல் இடையே பெரம்பலூா் வழியாக ரயில் பாதை அமைக்கப்படும் என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :20 ஜூலை 2023, 8:16 pm

DIN

அரியலூா் - நாமக்கல் இடையே பெரம்பலூா் வழியாக ரயில் பாதை அமைக்கப்படும் என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பெரம்பலூா் மாவட்டத்தில் ரயில்பாதை இல்லை. எனவேஅரியலூரிலிருந்து நாமக்கல்லுக்கு பெரம்பலூா் வழியாக ரயில் இயக்கக் கோரி பெரம்பலூா் மக்களவை உறுப்பினா் பாரிவேந்தா் ரயில்வே வாரியத்துக்கு கோரிக்கை வைத்திருந்தாா்.

இந்நிலையில் ரயில்வே வாரியம் விரைவில் அரியலூா்-நாமக்கல் இடையே ரயில் பாதைஅமைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இது குறித்து ரயில்வே வாரியம் பாரிவேந்தருக்கு எழுதிய கடிதம்:

அரியலூா் - நாமக்கல் இடையே 116.26 கி.மீ தொலைவுக்கு புதிய ரயில் பாதை அமைக்கும் பணிக்கான இறுதிக்கட்ட நில அளவை பணி நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த பணிகள் முடிக்கப்பட்டு ரயில் பாதை அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.