மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

உத்திரமேரூர் அருகே ஏரியில் வேன் கவிழ்ந்து விபத்து: 11பேர் காயம்

உத்திரமேரூர் அருகே ஏரியில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வேன் ஓட்டுநர் உள்பட 11 பேர் காயமடைந்துள்ளனர். 

News image

பொற்பந்தல் ஏரியில் கவிழ்ந்து கிடக்கும் வேன்.

Updated On :24 ஜூலை 2023, 4:16 am

DIN



உத்திரமேரூர் அருகே ஏரியில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வேன் ஓட்டுநர் உள்பட 11 பேர் காயமடைந்துள்ளனர். 

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் சாலவாக்கம் அடுத்த சீத்தனக்காவூர் பகுதியில் இருந்து திங்கள்கிழமை காலை 7 மணியளவில் படப்பையில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு ஆட்களை ஏற்றிச் சென்ற வேன் பொற்பந்தல் ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவத்தில் வேன் ஓட்டுநர் சிவானந்தம் மற்றும் ஐந்து பெண்கள் உள்பட 11 பேர் காயமடைந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாலாஜாபாத் காவல் ஆய்வாளர் ஜெயவேல், சாலவாக்கம் உதவி ஆய்வாளர் கிஷோர் உள்ளிட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.