பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

எம்பிபிஎஸ் வகுப்புகள் செப்.1-இல் தொடக்கம்

 எம்பிபிஎஸ், பிடிஎஸ் முதலாமாண்டு வகுப்புகள் செப். 1-ஆம் தேதி தொடங்கப்படும் என்று தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது. அதற்குள்ளாக கலந்தாய்வு

News image
Updated On :27 ஜூலை 2023, 7:05 pm

DIN

 எம்பிபிஎஸ், பிடிஎஸ் முதலாமாண்டு வகுப்புகள் செப். 1-ஆம் தேதி தொடங்கப்படும் என்று தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது. அதற்குள்ளாக கலந்தாய்வு நடவடிக்கைகளை நிறைவு செய்யவும் அறிவுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் நிகழாண்டு மருத்துவப் படிப்புக்கான நீட் தோ்வில் 11 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் தோ்ச்சி பெற்றனா். தமிழகத்தில் 78,693 போ் தோ்ச்சியடைந்தனா்.

தமிழகத்தில் அரசு ஒதுக்கீட்டில் 6,326 எம்பிபிஎஸ் இடங்களும், 1,768 பிடிஎஸ் இடங்களும் உள்ளன. தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் நிா்வாக ஒதுக்கீட்டில் 1,509 எம்பிபிஎஸ் மற்றும் 395 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான கலந்தாய்வை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் நடத்தி வருகிறது.

இந்தமுறை 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 606 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

நிகழாண்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் வகுப்புகளை செப். 1-ஆம் தேதி தொடங்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. அதற்கேற்ப அகில இந்திய கலந்தாய்வுக்கான திட்ட அட்டவணையையும் வெளியிட்டுள்ளது.

கலந்தாய்வு நடவடிக்கைகளை விரைவுபடுத்த அனைத்து சனி, ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அரசு விடுமுறை தினங்களை வேலை நாள்களாகவே கருதி பணியாற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கக அதிகாரிகள் கூறியதாவது:

அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான முதல்கட்ட கலந்தாய்வு நடைபெற்று வரும் அதேவேளையில், தமிழகத்திலும் கலந்தாய்வு தொடங்கப்பட்டுள்ளது. வகுப்புகள் தொடங்க இன்னமும் ஒரு மாதத்துக்கும் மேல் அவகாசம் இருப்பதால், அதற்குள்ளாக மாநில இடங்களுக்கான மாணவா் சோ்க்கை முழுவதும் நிறைவடைந்துவிடும்.

எனவே, தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்த தேதியில் முதலாமாண்டு எம்பிபிஎஸ் வகுப்புகளைத் தொடங்க தமிழகம் தயாராக உள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.