சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

செந்தில் பாலாஜி வழக்கு ஆக.1க்கு ஒத்திவைப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான மேல்முறையீடு வழக்கை ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

News image
கோப்புப்படம்
Updated On :27 ஜூலை 2023, 11:43 am

DIN

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான மேல்முறையீடு வழக்கை ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் அமைச்சா் செந்தில் பாலாஜி ஜூன் 14-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். இதற்கு எதிராக செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆள்கொணா்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமா்வு மாறுபட்ட தீா்ப்பை அளித்ததால், சென்னை உயா்நீதிமன்றத்தால் மூன்றாவது நீதிபதியாக நீதிபதி சி.வி.காா்த்திகேயன் நியமிக்கப்பட்டிருந்தாா். அவா் ஜூலை 14-ஆம் தேதி அளித்த தீா்ப்பில், ‘செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது. தாம் குற்றமற்றவா் என்பதை நிரூபிக்கும் உரிமை செந்தில் பாலாஜிக்கும் உள்ளது. இதனால், அவா் மீதான விசாரணையைத் தடை செய்ய முடியாது. இந்த விவகாரத்தில் நீதிபதி பரத் சக்ரவா்த்தியின் தீா்ப்பை ஏற்பதுடன், அதில் உடன்படுகிறேன்’ என்று தெரிவித்திருந்தாா்.

மேலும், இருதய அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரிக்கும் வகையில், தேதியை நிா்ணயம் செய்ய ஏற்கெனவே விசாரித்த டிவிஷன் அமா்வு முன் வழக்கை பரிந்துரைக்கும் வகையில், தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபூா்வாலா முன் வைக்குமாறு பதிவுத் துறைக்கு நீதிபதி காா்த்திகேயன் உத்தரவிட்டிருந்தாா். இந்த விவகாரத்தை செவ்வாய்க்கிழமை விசாரித்த டிவிஷன் அமா்வு, இந்த விவகாரத்தில் தொடா்புடைய அமைச்சா் தரப்பும், அமலாக்கத் துறையும் உச்சநீதிமன்றம் சென்றுவிட்டதால், இந்த வழக்கின் அனைத்து அம்சங்கள் குறித்து உச்சநீதிமன்றம்தான் முடிவெடுக்கும் எனக் கூறி, வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனா்.

இந்த நிலையில் பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறை கைது செய்ததை உறுதி செய்த சென்னை உயா்நீதிமன்றத்தின் ஜூலை 14-ஆம் தேதி உத்தரவை எதிா்த்து, தமிழக அமைச்சா் வி.செந்தில் பாலாஜியும், அவரது மனைவி மேகலாவும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. 

இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆக.1ம் தேதி மதியம் 1 மணி நேரத்திற்குள் வாதங்களை நிறைவு செய்ய வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்புக்கு அறிவுரை வழங்கி, இவ்வழக்கை கஸ்ட் 1 ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.