கம்பம்: தேனி மாவட்டம், கம்பத்தில் புகழ்பெற்ற கெளமாரியம்மன் ஆடி வெள்ளி 2 ஆவது வாரத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
தேனி மாவட்டம், கம்பத்தில் புகழ்பெற்றது அருள்மிகு கெளமாரியம்மன் திருக்கோவில். ஆடி வெள்ளிக்கிழமை 2 ஆவது வாரத்தை முன்னிட்டு கெளமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இதையும் படிக்க | 8 மாத குழந்தையை விற்று ஐபோன் வாங்கிய தம்பதி!
காலை முதலே பெண் பக்தர்கள் கோயிலுக்கு வந்து கம்பத்திற்கு நீர் ஊற்றி அம்மனை தரிசித்து பிரசாதம் பெற்று சென்றனர். ஆங்கூர்பாளையம் சாமாண்டியம்மன், லோயர்கேம்ப் பகவதியம்மன், கூடலூர் துர்க்கையம்மன் உள்ளிட்ட கோயில்களில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.