திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

துறையூரில் வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்டம் துறையூர் நீதிமன்றம் முன்பு வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News image

துறையூர் நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள வழக்குரைஞர்கள்

Updated On :28 ஜூலை 2023, 6:51 am

துறையூர்: திருச்சி மாவட்டம் துறையூர் நீதிமன்றம் முன்பு வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

துறையூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற வரம்பிலிருந்து ஜெம்புநாதபுரம் காவல் நிலைய வழக்குகளை முசிறி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற அதிகார வரம்பிற்கு மாற்றியதைக் கண்டித்து ஜூலை 24 முதல் 28 வரை  நீதிமன்றப் பணிகளிலிருந்து விலகி உள்ளனர். 

இந்நிலையில் துறையூர் வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் எஸ். சுரேஷ்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். 

சங்க செயலர் பி. கோகிலா உள்ளிட்ட வழக்குரைஞர்கள் கறுப்பு  நிற ஆடை அணிந்தும், கறுப்பு நிற ரிப்பன் குத்திக் கொண்டும் ஈடுபட்டனர். 

ஜெம்புநாதபுரம் காவல் நிலைய வழக்குகள் விசாரனையை மீண்டும் துறையூர் நீதிமன்றத்தில் மேற்கொள்ள உரிய உத்திரவு பிறப்பிக்க கோரி ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.