திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா தொடங்கியது!

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தும் 6ஆவது புத்தகத் திருவிழா வெள்ளிக்கிழமை (ஜூலை 28) காலை 10.30 மணிக்கு தொடங்கியது. 

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 2:44 am

DIN

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தும் 6ஆவது புத்தகத் திருவிழா வெள்ளிக்கிழமை (ஜூலை 28) காலை 10.30 மணிக்கு தொடங்கியது.

மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி புத்தகத் திருவிழாவைத் தொடங்கி வைத்து அரங்குகளைச் சுற்றிப் பார்த்தார். தொடக்க நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா தலைமை வகித்தார். சட்டப்பேரவை உறுப்பினர்கள் வை.முத்துராஜா, எம். சின்னதுரை, நகர்மன்றத் தலைவர் செ.திலகவதி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். 120 அரங்குகளில் மாநிலம் முழுவதும் இருந்தும் பிரபலமான புத்தகப் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

சிறைத் துறையின் சிறப்பு அரங்கு...

புதுக்கோட்டை பாஸ்டல் பள்ளி மற்றும் மாவட்ட சிறை வளாகத்தில் சிறைவாசிகளுக்கான நூலகம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், அந்த நூலகத்துக்கு நூல்களைத் தர விரும்பும் புத்தகப் பிரியர்கள் நூல்களை வாங்கி, வழங்கும் வகையில் தனியே ஓர் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.

அஞ்சல் துறையின் சிறப்பு அரங்கு...

தாங்கள் விரும்பும் நபர்களுக்கு புத்தகங்களைப் பரிசாக அனுப்பி வைக்க விரும்புவோர், புத்தகத்தை வாங்கிக் கொடுத்தால் இலவசமாக பொட்டலமிட்டு, குறைந்த கட்டணத்தில் பார்சலாக அனுப்பி வைப்பதற்காக அஞ்சல் துறை சார்பில் தனியே ஓர் அரங்கும் அமைக்கப்பட்டுள்ளது.

புத்தகத் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் கவிஞர் தங்கம் மூர்த்தி, அறிவியல் இயக்க மாநிலச் செயலர் எஸ்.டி. பாலகிருஷ்ணன், மாவட்டத் தலைவர் மா. வீரமுத்து, மாவட்டச் செயலர் மு. முத்துக்குமார் உள்ளிட்டோரும் செய்திருந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.