விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

மானாமதுரை முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவில் பால்குட ஊர்வலம்

மானாமதுரை கன்னார் தெரு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் ஆடி முளைப்பாரி உற்சவத்தில் சனிக்கிழமை பக்தர்கள் பால்குடம் சுமந்தும், தீ மிதித்தும் வேண்டுதல் நிறைவேற்றினர். 

News image

வைகை ஆற்றில் இருந்து முத்துமாரியம்மன் கோயிலுக்கு பால்குடம் சுமந்து வந்த பக்தர்கள்.

Updated On :29 ஜூலை 2023, 10:57 am IST

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கன்னார் தெரு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் ஆடி முளைப்பாரி உற்சவத்தில் சனிக்கிழமை பக்தர்கள் பால்குடம் சுமந்தும், தீ மிதித்தும் வேண்டுதல் நிறைவேற்றினர். 

இக்கோயிலில் விஸ்வகர்மா சமூகத்தினர் சார்பில் ஆடி முளைப்பாரி மற்றும் பூச்சொரிதல்  உற்சவ விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் தினமும் முத்துமாரி அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்று வந்தன. 

வாயில் அலகு குத்தி வந்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.

வாயில் அலகு குத்தி வந்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.

இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நடைபெற்ற பால்குடம் உற்சவத்தை முன்னிட்டு காப்புக்கட்டி விரதம் இருந்து வந்த பக்தர்கள், வைகை ஆற்றில் இருந்து பால்குடம் சுமந்தும் வாயில் அலகு குத்தியும் மேளதாளம் முழங்க ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். 

அதன் பின்னர் கோயில் எதிரே பரப்பி வைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இந்த பக்தர்கள் தீ மிதித்து வேண்டுதல் நிறைவேற்றினர். அதைத் தொடர்ந்து முத்துமாரி அம்மனுக்கு பாலாபிஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.

இவ்விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று முத்துமாரியம்மனை தரிசித்தனர். தொடர்ந்து, இன்று (சனிக்கிழமை) மாலை முளைப்பாரி ஊர்வலம் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.