பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

கோவையில் தினமணி சார்பில் தாகம் தணிப்போம் நிகழ்ச்சி!

கோவையில் தினமணி சார்பாக போக்குவரத்து காவல் துறையினர் மற்றும் சட்டம் ஒழுங்கு காவல் துறையினருக்கு அவர்களது தாகத்தை தணிக்கும் வகையில், குளிர்பானங்கள், குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன.

கோவை மாநகர போக்குவரத்து காவல் துறையினருக்கு குளிர்பானங்கள், தண்ணீர் பாட்டில்களை வழங்கிய கோவை மாநகர காவல் ஆணையர் வே. பாலகிருஷ்ணன்.

Published On :


கோவையில் தினமணி மற்றும் லட்சுமி செராமிக் மற்றும் டான்வி ஸ்நாக்ஸ் அண்ட் பெவரேஜஸ் நிறுவனத்தின் சார்பாக போக்குவரத்து காவல் துறையினர் மற்றும் சட்டம் ஒழுங்கு காவல் துறையினருக்கு அவர்களது தாகத்தை தணிக்கும் வகையில், குளிர்பானங்கள், குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன.

தமிழகம் முழுவதும் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தினமணி நாளிதழ் சார்பாக கோடை வெயில் தாக்கத்தை தணிக்கும் வகையில் காவல் துறையினருக்கு குளிர்பானங்கள், குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. 

இந்த நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக, கோவையில் வியாழக்கிழமை தினமணி சார்பில் தாகம் தணிப்போம் நிகழ்ச்சி அண்ணா சிலை சந்திப்பு பகுதியில் நடைபெற்றது. தினமணி நாளிதழுடன் லட்சுமி செராமிக் மற்றும் டான்வி ஸ்நாக்ஸ் அண்ட் பெவரேஜஸ் நிறுவனத்தினரும் இணைந்து பங்கேற்றனர். 

Story image

இந்நிகழ்ச்சியில் கோவை மாநகர போக்குவரத்து காவல் துறையினர் மற்றும் சட்டம் ஒழுங்கு காவல் துறையினருக்கும், குளிர்பானங்கள், தண்ணீர் பாட்டில்களை கோவை மாநகர காவல் ஆணையர் வே. பாலகிருஷ்ணன் வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் கோவை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் மதிவாணன், உதவி ஆணையர் அருள் முருகன். கோவை கிழக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஆனந்த். லட்சுமி செராமிக்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் என். சுதிர். டான்வி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பிரபு காந்தி குமார். எக்ஸ்பிரஸ் குழுமத்தின் கோவை அலுவலக முதன்மை மேலாளர் கா. தியாகராஜன். வர்த்தக பிரிவு முதன்மை மேலாளர் எம். பிரதாப். விற்பனை பிரிவு மேலாளர் பிரபு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.