திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

பெங்களூரு புகழேந்தி மீது தாக்குதல்: இபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு!

ஓபிஎஸ் ஆதரவாளரான பெங்களூர் புகழேந்தி மீது தாக்குதல் நடத்த காரணமான எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு நிலவுகிற

News image
Updated On :8 ஜூன் 2023, 8:30 am

DIN


சேலம்: ஓபிஎஸ் ஆதரவாளரான பெங்களூர் புகழேந்தி மீது தாக்குதல் நடத்த காரணமான எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

அதிமுகவை கைப்பற்ற போவது யார் என்ற சர்ச்சையில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு இடையே கடுமையான விவாதங்களும், நீதிமன்ற வழக்குகளும் நடைபெற்று வருகிறது 

இந்த நிலையில் ஓபிஎஸ் அணியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கடந்த மாதம் சேலத்தில் நடைபெற்றது. சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஓபிஎஸ் அணியின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர். 

எடப்பாடியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு ஓபிஎஸ் அணியின் மூத்த நிர்வாகிகள் வைத்திலிங்கம், பெங்களூர் புகழேந்தி, பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவர்கள் கூட்டத்தை முடித்துவிட்டு வெளியே வந்த புகழேந்தி மீது எடப்பாடி பகுதியைச் சேர்ந்த அதிமுகவினர் காரை தடுத்து நிறுத்தி அவர் மீது தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இருப்பினும் காரில் கதவை திறக்காமல் கார் வேகமாக புறப்பட்டதால் அதிமுகவின் தாக்குதலில் இருந்து பெங்களூர் புகழேந்தி தப்பினார்.

இந்நிலையில், சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகழேந்தி சார்பில் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் 

இந்த நிலையில் பெங்களூர் புகழேந்தி மீது தாக்குதல் நடத்த காரணமான எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர் பெங்களூர் புகழேந்தி மீது தாக்குல் நடத்த காரணமான எடப்பாடி பழனிசாமி மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இந்த சுவரொட்டி ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ளது

இந்த சம்பவம் அதிமுகவினரிடைய பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.