ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சின்னமனூரில் குடிநீர் கோரி மக்கள் சாலை மறியல்!

சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சீப்பாலக்கோட்டையில் குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் மேற்கொண்டனர்.

News image
குடிநீர் வழங்கக் கோரி சாலை மறியல் மேற்கொண்டுள்ள சீப்பாலக்கோட்டை பொதுமக்கள்
Updated On :10 ஜூன் 2023, 7:47 am

DIN


உத்தமபாளையம்: சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சீப்பாலக்கோட்டையில் குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் மேற்கொண்டனர்.

தேனி மாவட்டம், சின்னமனூர் ஒன்றியம் சீப்பாலக்கோட்டை ஊராட்சியில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு தேவையான குடிநீரை சீப்பாலக்கோட்டை ஊராட்சி நிர்வாகம் வினியோகம் செய்து வருகின்றனர்.

Story image

பொதுமக்கள் சாலை மறியலால் அப்பகுதியில் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 நாள்கள் மேலாக குடிநீர் வினியோகம் செய்யாத நிலையில் குடிநீர் வழங்க வலியுறுத்தி சாலை மறியல் மேற்கொண்டனர். இதற்காக ஓடப்பட்டி தேனி நெடுஞ்சாலையில் நடைபெற்ற சாலை மறியலில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

சாலை மறியலை கைவிட வலியுறுத்தி சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பாரதி மணி மற்றும் ஓடப்பட்டி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

காலை 8 மணிக்கு தொடங்கி சாலை மறியல் பகல் 11 மணி வரை தொடர்வதால் அப்பகுதியில் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.