
சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சேலம் மாநகராட்சி அண்ணா பூங்கா வளாகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு 1,713 சதுரடி பரப்பில் 4 அடி உயரத்தில் பீடமும், 16 அடி உயரத்தில் முழு உருவ வெண்கலச் சிலை நிறுவப்பட்டுள்ளது.
கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையடுத்து கருணாநிதி சிலைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, எம்.பி எஸ்.ஆர்.பார்த்திபன், எம்.எல்.ஏ ராஜேந்திரன், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிக்க: கால்நடை மருத்துவப் படிப்பு: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.