போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

முதல்வர், அமைச்சர்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பதிவு: தூத்துக்குடி பாஜக பிரமுகர் கைது 

தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாக தூத்துக்குடி பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

News image

கைது செய்யப்பட்ட செல்வ பாலன்

Updated On :15 ஜூன் 2023, 5:51 am

DIN

தூத்துக்குடி: தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாக தூத்துக்குடி பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக அமைச்சர்கள் குறித்து அவதூறு புகைப்படங்கள் மற்றும் பதிவுகள் சமூக வலைத்தளங்களில் புதன்கிழமை பரவியது. 

இதுகுறித்து தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தைச் சேர்ந்த திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட துணை அமைப்பாளர் அந்தோணி ராஜ் தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ஊரக டிஎஸ்பி சுரேஷ் உத்தரவின் பேரில் சிப்காட் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில் புதுக்கோட்டை அருகே உள்ள கரிசல் பகுதியைச் சேர்ந்த பாஜக பிரமுகர் செல்வபாலன் (29) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் மீது  5 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.