தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

திருப்பூர்: அரசு பேருந்து மோதி ஒருவர் பலி!

திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் அரசுப்பேருந்து மோதி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

News image
Updated On :18 ஜூன் 2023, 5:40 am

DIN

திருப்பூர்: திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் அரசுப்பேருந்து மோதி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து கோவை செல்லும் அரசு பேருந்து சனிக்கிழமை இரவு 11.30 மணி அளவில் புறப்பட்டது. அப்போது அந்த வழியாக நடந்து சென்று கொண்டிருந்தவர் மீது பேருந்து எதிர்பாராதவிதமாக மோதியது.

இந்த விபத்தில் திருப்பூர் முத்தனம்பாளையத்தைச் சேர்ந்த பாலு (45) என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து திருப்பூர் தெற்கு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தாராபுரத்தைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநரான ஈஸ்வரன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.