திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும்: ஆட்சியர் தகவல்

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று வழக்கம் போல்அனைத்து பள்ளிகளும்  செயல்படும் என ஆட்சியர் ஆல்பா ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று வழக்கம் போல்அனைத்து பள்ளிகளும்  செயல்படும் என ஆட்சியர் ஆல்பா ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் கோடைக்காலம் முடிந்த நிலையிலும் கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்த வெயில் காரணமாக பகலில் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

இதற்கிடையே தென்மேற்கு அதை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.  

இதைத் தொடர்ந்து கடந்த 2 நாள்களாக தொடர்ந்து விடாமல் மழை பெய்து வந்தது. இந்த மழையால் மாணவ,மாணவிகள் பாதிக்கக்கூடாது என்பதற்காக திருவள்ளூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. 

இதற்கிடையே இன்று வழக்கம் போல் அனைத்து பள்ளிகளும் செயல்படும் என ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com