டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

செந்தில் பாலாஜி வாயை திறந்தால் திமுகவில் முக்கால்வாசி பேர் மாட்டுவார்கள்: ஜெயக்குமார்

செந்தில் பாலாஜி வாயை திறந்தால் திமுகவில் முக்கால்வாசி பேர் மாட்டுவார்கள் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :21 ஜூன் 2023, 9:44 am

DIN

செந்தில் பாலாஜி வாயை திறந்தால் திமுகவில் முக்கால்வாசி பேர் மாட்டுவார்கள் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்த ஒன்றை கூட இந்த அரசாங்கம் நிறைவேற்ற வில்லை.  துறை இல்லாததற்கு எதற்கு அமைச்சர். இதனால் மக்களுடைய வரிப்பணம் தான் வீணாகிறது.

அன்றைக்கு நாங்கள் ஆட்சிக்கு வந்தால்  செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுப்போம் என சொல்லிவிட்டு  இப்போது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுப்பதை கட்சியினுடைய தூண்டுதலின் பெயரில் நடக்கிறது என்றால் எப்படி. மக்கள் முன்னணியில் இதையெல்லாம் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காக இன்று ஜனநாயக ரீதியான இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தி இருக்கிறோம்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு பண்பு இல்லாமல் ஒரு பதட்டத்தில் விடியோ பதிவு வெளியிட்டு இருக்கிறார்.  அதிமுகவினர் மீது திமுக எந்த வழக்கு வேண்டுமானாலும் போடட்டும் அதை நீதிமன்றத்தின் மூலம்  முறையாக எதிர்கொள்ள நாங்கள் தயார்.

செந்தில் பாலாஜி வாயை திறந்தால் திமுகவில் முக்கால்வாசி பேர் மாட்டுவார்கள். மக்கள் பிரச்சனைக்காக அதிமுக எதிர்த்து போராடி வருகிறது எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.