செந்தில் பாலாஜி வாயை திறந்தால் திமுகவில் முக்கால்வாசி பேர் மாட்டுவார்கள் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்த ஒன்றை கூட இந்த அரசாங்கம் நிறைவேற்ற வில்லை. துறை இல்லாததற்கு எதற்கு அமைச்சர். இதனால் மக்களுடைய வரிப்பணம் தான் வீணாகிறது.
அன்றைக்கு நாங்கள் ஆட்சிக்கு வந்தால் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுப்போம் என சொல்லிவிட்டு இப்போது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுப்பதை கட்சியினுடைய தூண்டுதலின் பெயரில் நடக்கிறது என்றால் எப்படி. மக்கள் முன்னணியில் இதையெல்லாம் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காக இன்று ஜனநாயக ரீதியான இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தி இருக்கிறோம்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு பண்பு இல்லாமல் ஒரு பதட்டத்தில் விடியோ பதிவு வெளியிட்டு இருக்கிறார். அதிமுகவினர் மீது திமுக எந்த வழக்கு வேண்டுமானாலும் போடட்டும் அதை நீதிமன்றத்தின் மூலம் முறையாக எதிர்கொள்ள நாங்கள் தயார்.
இதையும் படிக்க: செந்தில் பாலாஜி நலமுடன் இருக்க வேண்டும்: எஸ்.பி.வேலுமணி
செந்தில் பாலாஜி வாயை திறந்தால் திமுகவில் முக்கால்வாசி பேர் மாட்டுவார்கள். மக்கள் பிரச்சனைக்காக அதிமுக எதிர்த்து போராடி வருகிறது எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோமாளி வேடம் அணிந்து மாணவர்களை வரவேற்ற பள்ளி ஆசிரியர்!
8,200 பேருக்கு வேலை! ரூ. 18,600 கோடி முதலீட்டில் முதல்வர் விஜய் முன்னிலையில் ஒப்பந்தம்!!

இன்றைய செய்திகள் ஜூன் 4 - நேரலை!

891 புதிய வீரர்களுடன் முதல்முறையாக 1,248 பேர் பங்கேற்கும் கால்பந்து உலகக் கோப்பை!
விடியோக்கள்

”என்ன முயற்சிகள் நடந்திருக்கிறது? தவெகவிடம் கேள்வி கேட்க வேண்டும்!”: MLA செந்தில் பாலாஜி

#Podcast | மேற்கு வங்கத்தில் மகாராஷ்டிரா 2.0?: மமதாவுக்கு செக்! | News and Views | EPI - 44



