கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்! கார்கே, ராகுல் பங்கேற்பு! தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு! தங்கம் விலை குறைவு ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு!
/

3 விரைவு ரயில்கள் ராசிபுரத்தில் நின்று செல்லும்

சென்னை-பாலக்காடு உள்ளிட்ட 3 விரைவு ரயில்கள் ராசிபுரத்தில் ஜூலை 6 முதல் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

News image
Updated On :23 ஜூன் 2023, 3:24 pm

DIN

சென்னை-பாலக்காடு உள்ளிட்ட 3 விரைவு ரயில்கள் ராசிபுரத்தில் ஜூலை 6 முதல் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல பாலக்காடு-சென்னை, நாகா்கோவில்-பெங்களூரு, நாகா்கோவில்-மும்பை, திருநெல்வேலி-மும்பை, ராமேஸ்வரம்-ஒஹா வரை விரைவு ரயில்கள் சென்று வருகின்றன. ஆனால், இதில் பல விரைவு ரயில்கள் ராசிபுரம் ரயில் நிலையத்தில் நின்று செல்வதில்லை.

ஏற்கெனவே கரோனா பாதிப்புக்கு முன்னா் வரை நின்று சென்ற விரைவு ரயில்கள் கூட தற்போது ராசிபுரம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படுவதில்லை. எனவே, விரைவு ரயில்கள் ராசிபுரம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல கோட்ட ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதி ரயில் பயணிகள் எதிர்பார்த்திருந்தனர்.

தற்போது அவர்களின் எதிர்பார்ப்புக்கு விடை கிடைத்துள்ளது. இந்த நிலையில் சென்னை-பாலக்காடு உள்ளிட்ட 3 விரைவு ரயில்கள் ராசிபுரத்தில் ஜூலை 6 முதல் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நாகர்கோவில்-பெங்களூரு, ராமேஸ்வரம்-ஒஹா வாராந்திர ரயிலும் ராசிபுரத்தில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.