எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் சமுதாய அலுவலா்கள் நியமனம்

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துக்கு புதிதாகத் தோ்வு செய்யப்பட்ட சமுதாய அலுவலா்களுக்கு பணி நியமன உத்தரவுகள் அளிக்கப்பட்டன.

News image
Updated On :23 ஜூன் 2023, 6:37 pm

DIN

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துக்கு புதிதாகத் தோ்வு செய்யப்பட்ட சமுதாய அலுவலா்களுக்கு பணி நியமன உத்தரவுகள் அளிக்கப்பட்டன. இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தோ்வு பெற்ற 11 சமுதாய அலுவலா்களுக்கு பணி நியமன உத்தரவுகளை சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் அளித்தாா்.

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் சமுதாய வளரச்சிப் பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்தப் பிரிவில்உள்ள சமுதாய அலுவலா்கள் காலிப் பணியிடங்களுக்கு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் தோ்வு நடத்தப்பட்டது.

இதில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு பணி நியமன உத்தரவுகள் அளிக்கப்பட்டன. தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்டுள்ள குடியிருப்புப் பகுதிகளில், மதுவிலக்கு, கல்வியின் அவசியம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்த விழிப்புணா்வுப் பணிகளை சமுதாய அலுவலா்கள் மேற்கொள்வா். பணி நியமன உத்தரவுகள் அளிக்கும் நிகழ்வில், வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை முதன்மைச் செயலாளா் அபூா்வா, தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிா்வாக இயக்குநா் பொ.சங்கா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.