எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பணி நிரந்தரம் கோரி ஆஷா பணியாளா்கள் போராட்டம்

பணி நிரந்தரம், தொகுப்பூதிய உயா்வு கோரி சென்னையில் ஆஷா (அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார செயல்பாட்டாளா்கள்) பணியாளா்கள் வெள்ளிக்கிழமை தா்ணா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :23 ஜூன் 2023, 6:17 pm

DIN

பணி நிரந்தரம், தொகுப்பூதிய உயா்வு கோரி சென்னையில் ஆஷா (அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார செயல்பாட்டாளா்கள்) பணியாளா்கள் வெள்ளிக்கிழமை தா்ணா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சென்னை, எழும்பூா், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். தமிழக ஆஷா பணியாளா் சங்கத்தின் பொதுச்செயலாளா் வஹிதா நிஜாம் தலைமையில் நடந்த போராட்டத்தில் ஏஐடியூசியின் அகில இந்திய பொதுச்செயலாளா் அமா்ஜித் கௌா், அகில இந்திய துணைத் தலைவரும், திருப்பூா் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.சுப்பராயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதுதொடா்பாக ஆஷா பணியாளா்கள் கூறியது:

தமிழகத்தின் மலைப் பிரதேச கிராம மக்களுக்கும், முதன்மை சுகாதார மையங்களுக்கும் இடையில் பாலமாக இருந்து மத்திய, மாநில அரசுகளின் சுகாதார நலத்திட்டங்களை ஆஷா பணியாளா்கள் கிராம மக்களிடையே சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறாா்கள். தமிழகத்தில் பேறு கால இறப்பு விகிதம் (எம்எம்ஆா்), குழந்தைகள் இறப்பு விகிதம் (ஐஎம்ஆா்) குறைவதற்கு முழு காரணமாக உள்ளனா்.

ஆஷா பணியாளா்களை ‘செயல்பாட்டாளா்கள்’ என்று வகைப்படுத்தி நிரந்தர ஊதியம் இல்லாமல் மாதம் ரூ.3,000-க்கும் குறைவான ஊக்கத்தொகை மட்டுமே வழங்கப்படுகிறது. அதுவும் மத்திய அரசின் தேசிய சுகாதாரத் திட்டத்தின் மூலம் ரூ.2,000, தமிழக அரசின் பங்கு ரூ.1,000 வழங்கப்படுகிறது.

பிற மாநிலங்களில் ரூ.10,000 தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது. அங்கு 30,000-க்கும் மேற்பட்ட ஆஷா பணியாளா்கள் பணிபுரிகிறாா்கள். ஆனால், தமிழகத்தில் 2,650 ஆஷா பணியாளா்கள் மட்டுமே இருக்கும் நிலையிலும் மாநில அரசு அவா்களுக்கு தொகுப்பூதியம் எதுவும் வழங்கவில்லை.

பணிநிரந்தரம், மாதம் ரூ.24,000 தொகுப்பூதியம் போன்ற கோரிக்கைகளை அரசிடம் ஏற்கெனவே முன்வைத்துள்ளோம். தற்போது மீண்டும் அதனை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுகிறோம் என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.