'ஆதனின் பொம்மை' நாவலுக்காக எழுத்தாளர் உதயசங்கருக்கு பால புரஸ்கார் சாகித்ய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் இலக்கியத்திற்கான 2023 ஆம் ஆண்டின் பால புரஸ்கார் சாகித்ய விருது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியில் எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய 'ஆதனின் பொம்மை' என்ற நாவல் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி கோவில்பட்டியைச் சேர்ந்த எழுத்தாளர் உதயசங்கர் கவிதை, சிறுகதை, குறுநாவல், சிறுவர் இலக்கியம், கட்டுரை மற்றும் மொழிபெயர்ப்பு நூல்கள் என 1980-இல் துவங்கி கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேல் இலக்கிய உலகில் எழுதிக்கொண்டிருப்பவர்.
1960 ஆம் ஆண்டு பிறந்த இவர், தனது 20 ஆவது வயதில் கவிதை எழுதத் துவங்கினார். 1990-களில் குழந்தை இலக்கியத்தில் தடம்பதித்து குழந்தைகளுக்கான கதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்பு நூல்கள் என இன்றும் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 100-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
மாயாவின் பொம்மை, புலிக்குகை மர்மம், பொம்மைகளின் நகரம், அலாவுதீனின் சாகசங்கள் உள்ளிட்ட குழந்தை இலக்கியங்கள் குறிப்பிடத்தக்கவை.
மேலும் ஆங்கிலம், மலையாள மொழிகளில் இருந்து பல நூல்களை மொழிபெயர்த்துள்ளார். தன் படைப்புகளுக்காக பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.
இதையும் படிக்க | எழுத்தாளர் ராம் தங்கத்திற்கு யுவ புரஸ்கார் விருது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

திருநள்ளாறு! நாளை சனிப்பெயா்ச்சி விழா!

3 நாள்கள் சரிவுக்குப் பின் ஏற்றத்தில் பங்குச்சந்தை!

அசாமில் மூன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்!

மக்களே எச்சரிக்கை! அதிகரிக்கிறது மெட்ராஸ் - ஐ!
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

