'திருக்கார்த்தியல்' சிறுகதைத் தொகுப்புக்காக எழுத்தாளர் ராம் தங்கத்திற்கு சாகித்ய அகாதெமியின் யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த எழுத்தாளர் ராம் தங்கம் சிறுவயதில் இருந்தே தொடங்கிய வாசிப்பின் ஆர்வமாக எழுதத் தொடங்கினார். தினகரன், ஆனந்த விகடன் போன்ற பத்திரிகைகளில் பணியாற்றியவர்.
2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இவரது முதல் புத்தகமான ‘காந்திராமன்’ வெளிவந்தது. தொடர்ந்து ‘ஊர்சுற்றிப் பறவை’, 'மீனவ வீரனுக்கு ஒரு கோவில்’ ஆகிய நூல்களை எழுதினார்.
இதையும் படிக்க | எழுத்தாளர் உதயசங்கருக்கு பால புரஸ்கார் சாகித்ய விருது!

2019 ஆம் ஆண்டு வெளியான 'திருக்கார்த்தியல்' எனும் சிறுகதைத் தொகுப்புக்கு 2023 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமியின் யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜவனம்(குறு நாவல்), புலிக்குத்தி(சிறுகதைத் தொகுப்பு) ஆகியவை இவரது சமீபத்திய படைப்புகளாகும்.
நேஷனல் புக் ட்ரஸ்ட்டுக்காக ‘சூரியனை எட்ட ஏழு படிகள்’, ‘காட்டிலே ஆனந்தம்’, ‘ஒரு சுண்டெலியின் கதை ஆகிய சிறுவர் கதைகளை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்த்துள்ளார்.
மேலும் தனது பயண அனுபவங்களை ‘கடவுளின் தேசத்தில்' என்றும் குமரி மாவட்டம் சார்ந்த வரலாற்றுக் கட்டுரைகளை ‘சிதறால்’ என்ற பெயரிலும் அமேசான் கிண்டிலில் மின்நூலாக வெளியிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தம்பி அடித்துக் கொலை: அண்ணன் கைது

ரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

ஊழியா்களின் எண்ணிக்கைக்கு நிகராக ஏ.ஐ. ஏஜென்டுகள் உருவாக்கப்படும்

குட்கா வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய முன்னாள் வணிக வரித் துறை அதிகாரி மனு தள்ளுபடி
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


