இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

எழுத்தாளர் ராம் தங்கத்திற்கு யுவ புரஸ்கார் விருது!

தமிழில் 'திருக்கார்த்தியல்' சிறுகதைத் தொகுப்புக்காக எழுத்தாளர் ராம் தங்கத்திற்கு சாகித்ய அகாதெமியின் யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :23 ஜூன் 2023, 10:49 am

DIN

'திருக்கார்த்தியல்' சிறுகதைத் தொகுப்புக்காக எழுத்தாளர் ராம் தங்கத்திற்கு சாகித்ய அகாதெமியின் யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த எழுத்தாளர் ராம் தங்கம் சிறுவயதில் இருந்தே தொடங்கிய வாசிப்பின் ஆர்வமாக எழுதத் தொடங்கினார். தினகரன், ஆனந்த விகடன் போன்ற பத்திரிகைகளில் பணியாற்றியவர்.

2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இவரது முதல் புத்தகமான ‘காந்திராமன்’ வெளிவந்தது. தொடர்ந்து ‘ஊர்சுற்றிப் பறவை’, 'மீனவ வீரனுக்கு ஒரு கோவில்’ ஆகிய நூல்களை எழுதினார். 

Story image

2019 ஆம் ஆண்டு வெளியான 'திருக்கார்த்தியல்' எனும் சிறுகதைத் தொகுப்புக்கு 2023 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமியின் யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

ராஜவனம்(குறு நாவல்), புலிக்குத்தி(சிறுகதைத் தொகுப்பு) ஆகியவை இவரது சமீபத்திய படைப்புகளாகும். 

நேஷனல் புக் ட்ரஸ்ட்டுக்காக ‘சூரியனை எட்ட ஏழு படிகள்’,  ‘காட்டிலே ஆனந்தம்’,  ‘ஒரு சுண்டெலியின் கதை ஆகிய சிறுவர் கதைகளை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்த்துள்ளார். 

மேலும் தனது பயண அனுபவங்களை ‘கடவுளின் தேசத்தில்' என்றும் குமரி மாவட்டம் சார்ந்த வரலாற்றுக் கட்டுரைகளை ‘சிதறால்’ என்ற பெயரிலும் அமேசான் கிண்டிலில் மின்நூலாக வெளியிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.