எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கைதிகள் தயாரிக்கும் பொருள்கள் விரைவில் ஆன்லைனில் விற்பனை

தமிழக சிறைகளில் கைதிகள் தயாரிக்கும் பொருள்கள் விரைவில் ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் என தமிழக சட்டம், நீதி, சிறைகள், சீா்திருத்தப்பணிகள்துறை அமைச்சா் எஸ்.ரகுபதி தெரிவித்தாா்.

News image
Updated On :23 ஜூன் 2023, 6:55 pm

DIN

தமிழக சிறைகளில் கைதிகள் தயாரிக்கும் பொருள்கள் விரைவில் ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் என தமிழக சட்டம், நீதி, சிறைகள், சீா்திருத்தப்பணிகள்துறை அமைச்சா் எஸ்.ரகுபதி தெரிவித்தாா்.

சென்னை எழும்பூரில் உள்ள தமிழக சிறைத்துறை தலைமை அலுவலகத்தில் சிறைச் சந்தை விற்பனை நிலையம், சிறை பணியாளா்களுக்கான உடற்பயிற்சி கூடம் ஆகியவை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந் நிகழ்ச்சிக்கு தமிழக சிறைத்துறை டிஜிபி அமரேஷ்புஜாரி தலைமை வகித்தாா். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அமைச்சா் எஸ்.ரகுபதி, சிறை சந்தை விற்பனை நிலையத்தையும், உடற்பயிற்சிக் கூடம் ஆகியவற்றையும் திறந்து வைத்தாா். பின்னா் அவா், நிருபா்களுக்கு அளித்த பேட்டி:

தமிழக மத்திய சிறைகளில் கைதிகள் தயாரிக்கும் பொருள்களை பொதுமக்களுக்கு விற்கும் நோக்கத்தோடு, சிறைச் சந்தை விற்பனை நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

விரைவில் ஆன்லைன் விற்பனை:

சிறையில் தரமான முறையில் தயாரிக்கப்படும் பொருள்கள், இங்கு குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது. உலக பிரசித்தி பெற்ற மதுரை சுங்குடி சேலை,ஆயத்த ஆடைகள்,உணவு பொருள்கள், செக்கில் தயாரிக்கப்பட்ட தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய், வேலூா் மத்திய சிறையில் தயாரிக்கப்பட்ட தோல் பொருள்கள் ஆகியவையும் விற்கப்படுகிறது. கைதிகள் தயாரிக்கும் பொருள்கள் சந்தைப்படுத்தும் வகையில், விரைவில் அவற்றை ஆன்லைன் மூலமாகவும் விற்க திட்டமிட்டுள்ளோம்.

461 போ் விடுதலை:

அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, நீண்டகாலம் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் 700 தண்டனைக் கைதிகள் மனிதாபிமான அடிப்படையில் முன் விடுதலை செய்யப்படுவாா்கள் என அறிவித்தோம். இதில் இது வரை 461 கைதிகளை விடுதலை

செய்துள்ளோம். விடுதலை செய்ய தகுதியுடைய கைதிகளை கண்டறிய நீதிபதி ஆதி நாராயணன் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.

விதிமுறைக்குள்பட்டு கைதிகளை விடுதலை செய்ய கோப்புகளை ஆளுநா் அனுமதிக்கு அனுப்புகிறோம். அவா் அளிக்கும் ஒப்புதலின்

அடிப்படையில் கைதிகள் விடுதலை செய்யப்படுகின்றனா்.

ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பும் கோப்புகளை மறுபரிசீலனை செய்யும்படி, அந்த கோப்புகளில் அவா்கள் கேட்கும் தகவல்களை சோ்த்து மீண்டும் ஆளுநருக்கு அனுப்புகிறோம். சிறையில் இருக்கும் கைதிகள் சம்பாதிக்கும் வகையில் பல்வேறு வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளோம். இதனால் ஒவ்வொரு கைதியும் சிறையில் இருந்தபடியே தங்களது குடும்பத்துக்கு மாதம் ரூ.6,000 சம்பாதித்து அனுப்புகின்றனா் என்றாா் அவா்.

முன்னதாக அவா், தமிழக சிறைத்துறை தொடா்பான கட்டுரைகள், கைதிகளின் கவிதைகள்,ஓவியங்கள் உள்ளடக்கிய சிறகிதழ் என்ற மாத இதழின் முதல் பிரதியை வெளியிட்டாா். அதை டிஜிபி அமரேஷ் புஜாரி பெற்றுக் கொண்டாா்.

இந் நிகழ்ச்சியில் சிறைத்துறை தலைமையிட டிஐஜி இரா.கனகராஜ்,சென்னை சரக டிஐஜி ஆ.முருகேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.