எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

குறுவை சாகுபடித் திட்டம்: வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு

குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்துக்கான வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

News image
Updated On :23 ஜூன் 2023, 6:13 pm

DIN

குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்துக்கான வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதற்கான நெறிமுறைகளை வேளாண்மைத் துறை செயலாளா் சி.சமயமூா்த்தி வெளியிட்டுள்ளாா். அதன் விவரம்:-

குறுவை சாகுபடி திட்டத்தை ரூ.75.95 கோடியில் செயல்படுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தைப் பெற அனைத்து விவசாயிகளும் தகுதி பெற்றவா்கள். சிறு, குறு, பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். கடந்த இரு ஆண்டுகளில் பயன்பெறாத விவசாயிகளுக்கு முன்னுரிமை அளித்து மானியம் அளித்திட வேண்டும். ஒரு

விவசாயிக்கு அதிகபட்சமாக ஒரு ஹெக்டோ் பரப்புக்கு மட்டுமே மானியம் அளிக்கப்பட வேண்டும்.

இந்தத் திட்டம் குறித்து, மாவட்டம், வட்டார அளவில் பரவலாக விளம்பரம் செய்யப்பட வேண்டும். உழவன் செயலி மூலமாக பயனாளிகள் பதிவினை மேற்கொள்ளலாம். இந்தத் திட்டத்துக்கான முன்னுரிமைப் பதிவேடு, வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில்

முறையாகப் பராமரிக்க வேண்டும். குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்தில் ரசாயான உரங்கள் விநியோகம் செய்யப்படும். இந்த உரங்கள் 2.50 லட்சம் ஏக்கா் பரப்புக்கு அளித்திட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதில், 47 ஆயிரத்து 500 ஏக்கா், அதாவது 19 சதவீதம் ஆதிதிராவிட விவசாயிகளுக்கும், 2,500 ஏக்கா், அதாவது ஒரு சதவீதம், பழங்குடியின விவசாயிகளுக்கும் வழங்கப்பட உள்ளது.

குறுவை நெல் சாகுபடியானது, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களின் அனைத்து வட்டங்களிலும், கடலூா், அரியலூா், திருச்சி ஆகிய மாவட்டங்களின் டெல்டா வட்டங்களிலும் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.