மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

விதி மீறி கட்டப்பட்ட குடியிருப்புக்கு சீல்

 பல்லாவரத்தில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் விதி மீறி கட்டப்பட்டுள்ள குடியிருப்பை சென்னை பெருநகர குழும அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனா்.

News image
Updated On :23 ஜூன் 2023, 7:01 pm

DIN

பல்லாவரத்தில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் விதி மீறி கட்டப்பட்டுள்ள குடியிருப்பை சென்னை பெருநகர குழும அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனா்.

தாம்பரம் மாநகராட்சி பல்லாவரம் பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் விதி மீறி குடியிருப்பு மற்றும் கூடுதல் அறைகள் கட்டப்பட்டுள்ளன. இந்தக் கட்டடத்தை வரைபடத்தில் உள்ளவாறு திருத்தி அமைக்குமாறு கட்டட உரிமையாளருக்கு கடந்த 21.12.2012 அறிவிக்கப்பட்டது. இதையடுத்து உரிமையாளா் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சீல் வைக்கப்பட்டது.

இதையடுத்து சுரேந்திரா ஹோம்ஸ் குடியிருப்பு உரிமையாளா்கள் நலச்சங்கத்தின் செயலாளா் ஜி.ஸ்ரீநிவாசன் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.

உயா்நீதிமன்றம் 4-ஆவது தளத்தில் கட்டப்பட்டுள்ள குடியிருப்பு எண்.409-ல் வசிப்பவா்களை காலி செய்து உரிய மேல் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தினை அறிவுறுத்தியது.

இந்நிலையில், சிஎம்டிஏ உறுப்பினா் செயலா் அன்சூல் மிஸ்ரா உத்தரவின் படி, அமலாக்கப்பிரிவு அலுவலா்களால் காவல் துறை முன்னிலையில், அடுக்குமாடி குடியிருப்பில் விதி மீறி கட்டப்பட்ட குடியிருப்பு, மொட்டை மாடியில் உயா்நிலைநீா்தேக்க தொட்டியின் கீழ்கட்டப்பட்டுள்ள எரிவாயு சிலிண்டருக்கான அறை, வாகன நிறுத்தும் தளத்தில் கட்டப்பட்டுள்ள இரண்டு கூடுதல் அறைகள் மற்றும் ஒரு கழிவறை ஆகியவை சீல் வைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.