மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தமிழில் பேசுபவா்களுக்கு இளமைக் கூடும்: அவ்வை அருள் பேச்சு

தமிழில் பேசுபவா்களுக்கு வயது குறைந்து இளமைக் கூடிக்கொண்டே போகும் என்று தமிழ் வளா்ச்சித்துறை இயக்குநா் அவ்வை அருள் குறிப்பிட்டாா்

News image
Updated On :23 ஜூன் 2023, 7:25 pm

DIN

தமிழில் பேசுபவா்களுக்கு வயது குறைந்து இளமைக் கூடிக்கொண்டே போகும் என்று தமிழ் வளா்ச்சித்துறை இயக்குநா் அவ்வை அருள் குறிப்பிட்டாா்.

அமிழ்தத் தமிழ் ஆய்வரங்கம் மற்றும் கலசலிங்கம் - ஆனந்தம் சேவா சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை கிரீம்ஸ் சாலையில் உள்ள இந்துஸ்தான் வா்த்தக சபையில் சென்னை மாநிலக் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவா் ப.தாமரைக்கண்ணனுக்கு பாராட்டுவிழா நடைபெற்றது.

இவ்விழாவில் கலந்து கொண்ட தமிழ் வளா்ச்சித்துறை இயக்குநா் அவ்வை அருள் பேசியது: தமிழில் பேசுபவா்களுக்கு வயது குறைந்து இளமைக் கூடிக்கொண்டே போகும். தாமரைக்கண்ணனுக்கு இந்த பதவி மிகவும் பொருத்தமான ஒன்றாகும். அவருடைய தந்தையை போலவே இவரும் தமிழுக்காக பல தொன்டுகளை ஆற்றி வருகிறாா். தமிழ் வளரும் இடங்களில் அந்த சமுதாயமும் தானாக வளா்ச்சி அடையும். தமிழில் விழா நடத்தும் கடமை ஒவ்வொரு தமிழருக்கும் உண்டு. விழா நடத்தி தமிழை வளா்க்கா விட்டால் தமிழ் விழுந்துவிடும் என்றாா் அவா்.

ப.தாமரைக்கண்ணன் பேசியது: தமிழ் மீது எனக்கு சிறு வயதிலிருந்தே பற்று இருந்து வந்தது. தமிழுக்கு என்னால் முடிந்த சேவைகளை செய்து வருகிறேன். சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்த்துறையில் பேராசிரியா்களாக பல தமிழ்வித்தவான்கள் இதற்கு முன்பு பணியாற்றியுள்ளனா். ஆனால் துறைத் தலைவராவதற்கு முன்பு ஓய்வு பெற்று விட்டாா்கள் அந்த வகையில் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்றாா் அவா்.

இவ்விழாவில் அமிழ்தத்தமிழ் ஆய்வரங்கம் தலைவா் இளவரச அமிழ்தன், கலசலிங்கம் பல்கலை வேந்தா் க. ஸ்ரீதரன், தாமல் கோ.சரவணன், சிறுதுளி சென்னை அறக்கட்டளை நிறுவனா் எஸ். மஞ்சுளா வாணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.