முன்னாள் பிரதமர் வி.பி. சிங் பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள அவர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை முன்னேற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த புரட்சித் தலைவருக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன். சமூகநீதிக்காக அச்சமின்றி போராடினார் வி.பி. சிங்.
இடஒதுக்கீடு நமது உரிமை என்பதை வலியுறுத்த அனைவரையும் வலுவாக்கினார். கருணாநிதியுடன் சேர்ந்தே இருந்தார்.
இருவரும் தாழ்த்தப்பட்டோருக்கு அதிகாரம் அளிப்பதை பகிர்ந்து கொண்டனர். அவரது எண்ணங்கள் ஒளிமயமான அதேநேரத்தில் சமமான எதிர்காலத்தை நோக்கி நம்மை வழிநடத்தட்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.