எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கோயில் நிலங்களை அபகரித்தவர்கள் மீது பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்: வைத்திலிங்கம்

கோயில் நிலங்களை அபகரித்தவர்கள் மீது பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுவை காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. வலியுறுத்தியுயள்ளார். 

News image
Updated On :26 ஜூன் 2023, 7:13 am

DIN

கோயில் நிலங்களை அபகரித்தவர்கள் மீது பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுவை காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. வலியுறுத்தியுயள்ளார். 

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை புரிந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த முத்தமிழ் செல்விக்கு புதுவை காங்கிரஸ் அலுவலகத்தில் பாராட்டி திங்கள் கிழமை மரியாதை அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் வே. நாராயணசாமி, காங்கிரஸ் புதுவை மாநிலத் தலைவர்  வைத்தியலிங்கம் எம்.பி., எம்எல்ஏ மு. வைத்தியநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் வைத்திலிங்கம் எம்.பி. கூறியதாவது: புதுச்சேரியில் கோயில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு விற்கப்பட்டுள்ளன. நிலங்களை விற்றவர்கள், வாங்கியவர்கள் அனைவர் மீதும் பாரபட்சம் இன்றி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில் நிலம் விற்பனையை தடுக்க அவற்றை பூஜ்ஜிய மதிப்பிற்கு கொண்டு வர வேண்டும்.

புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் ஏற்பட்டிருக்கிற கடல் அரிப்பைத் தடுக்க புதுவை அரசு மத்திய அரசு உதவியை நாடி திட்டங்களை வகுக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.