கடந்த இரண்டு ஆண்டில் டெங்கு, மலேரியா போன்ற பாதிப்புகள் மாநகராட்சி, நகராட்சிகளின் நடவடிக்கைகளால் குறைந்துள்ளது. 4,300 காலிப் பணியிடங்களை நிரப்பியுள்ளோம். 1,021 மருத்துவர்களை நிரப்ப நேர்காணல் நடத்த அழைப்பு கொடுத்து 25 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். இதன் பொது தேர்வுக்கான முடிவு 15 நாளில் வெளிவரும். அதன்பின் 1,021 மருத்துவர்களும் 980 மருந்தாளுநர்களும் என ஒரேநாளில் 2,000 பேருக்கு முதல்வர் பணி ஆணை வழங்குவார். காலிப் பணியிடங்கள் நிரப்ப தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேசிய அளவிலான வழிகாட்டுதலின்படி பணி நியமனங்கள் நடைபெறுகிறது.