முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

லியோ பட பாடல்: நடிகர் விஜய்க்கு நோட்டீஸ்!

லியோ பட பாடல் விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

News image
Updated On :27 ஜூன் 2023, 1:35 pm IST

லியோ பட பாடல் விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

நடிகா் விஜய் நடிப்பில் இயக்குநா் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படம், அக்டோபா் மாதம் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் நடிகா் விஜய் பாடிய ‘நா ரெடி’ பாடல் அண்மையில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், சென்னை கொருக்குப்பேட்டையைச் சோ்ந்த சமூக ஆா்வலரான ஆா்.டி.ஐ.செல்வம் என்பவா், அந்தப் பாடலுக்கு எதிராக ஆன்லைன் வாயிலாக சென்னை காவல் ஆணையரிடம் திங்கள்கிழமை புகாா் அளித்தாா்.

அதில், போதைப் பொருள் பழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும், ரெளடியிசத்தை உருவாக்கும் வகையிலும் பாடல் இடம் பெற்றுள்ளது.

இந்தப் பாடலின் வரிகள், இளைஞா்கள் மத்தியில், சமூகத்தில் போதைப் பொருள்களை ஆதரிக்கும் வகையிலும், சமூக சீா்கேடுகளை ஊக்குவிக்கும் வகையிலும் உள்ளது. எனவே, நடிகா் விஜய் மீது போதைத் தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், ரெளடியிசம், போதைப் பொருள்கள் பயன்பாட்டுக்கு இளைஞா்களைத் தூண்டி விடுதல் போன்ற குற்றத்துக்காக இந்திய தண்டனை சட்டத்தின் கீழும் அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், லியோ பட பாடல் விவகாரம் தொடர்பாக  நடிகர் விஜய்யின் பனையூர், சாலிகிராமம் முகவரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஆன்லைன் மூலமாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு புகார் அனுப்பியதால், நடிகர் விஜய்யின் ரசிகர்கள், விஜய் மக்கள் இயக்கத்தினர் 500க்கும் மேற்பட்டோர் தொலைபேசி வாயிலாக கொலை மிரட்டல் விடுப்பதாகவும் ஆர்.டி.ஐ செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.