சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

சொத்துக்குவிப்பு வழக்கு: அமைச்சர் பொன்முடி விடுவிப்பு!

சொத்துக் குவிப்பு வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி, அமைச்சர் க.பொன்முடியை வழக்கிலிருந்து விடுவித்து வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

News image
Updated On :28 ஜூன் 2023, 1:50 pm

DIN


வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இருந்து தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை விடுவித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். 

திமுகவை சேர்ந்த தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர்  வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2006 ம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினரால் வழக்கு பதிவு செய்த நிலையில் வழக்கு விழுப்புரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் அவ்வழக்கு  12.07.2022 அன்று வேலூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்க்கு மாற்றப்பட்டு 19.10.2022-ல் விசாரணை தொடங்கியது. இந்நிலையில் கடந்த 07.11.2022 அன்று நேரடியாக அமைச்சர் பொன்முடி அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் நேரில் அஜராகினர்.

இதனை அடுத்து இவ்வலக்கில் நேரடியாக ஆஜராவதில் இருந்து அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகியோர் விலக்கு பெற்றனர். இதனை அடுத்து கடந்த ஏழு மாதங்களாக வேலூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இதில் 172 சாட்சியங்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், இது தொடர்பான தீர்ப்பு இன்று மாலை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், மாலை 5.00 மணிக்கு அமைச்சர் பொன்முடி அவரின் மனைவி விசாலாட்சி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். பின்னர் 5.20 க்கு நீதிபதி முன் இருவரும் ஆஜராகிய நிலையில் தீர்ப்பு வாசிக்கப்பட்டது. 

குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றும், போதிய ஆதாரங்கள் இல்லை என்பதாலும் இருவரையும் இவ்வழக்கிலிருந்து விடுதலை செய்வதாக வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி வசந்த லீலா உத்தரவிட்டார். 

இதனை அடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அமைச்சர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் நீதிமன்ற வளாகத்தில் இருந்து புறப்பட்டு சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.