ஓராண்டு நிறைவு: முதல்வரிடம் வாழ்த்து பெற்றார் மேயர் பிரியா!

சென்னை மாநகராட்சி மேயராக பொறுப்பேற்று ஓராண்டு ஆன நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து சென்னை மேயர் ஆர். பிரியா வாழ்த்து பெற்றார். 
ஓராண்டு நிறைவு: முதல்வரிடம் வாழ்த்து பெற்றார் மேயர் பிரியா!

சென்னை மாநகராட்சி மேயராக பொறுப்பேற்று ஓராண்டு ஆன நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து சென்னை மேயர் ஆர். பிரியா வாழ்த்து பெற்றார். 

சென்னை மாநகராட்சி மேயராக ஆர். பிரியா கடந்த ஆண்டு மார்ச் 4 ஆம் தேதி பொறுப்பேற்றார். மேயர் தேர்தலில் அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாத நிலையில் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். 

மிகவும் இளம்வயது மேயர், சென்னையின் முதல் பட்டியலின பெண் மேயர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். 

இந்நிலையில் மேயர் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி, சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com