சென்னை மாநகராட்சி மேயராக பொறுப்பேற்று ஓராண்டு ஆன நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து சென்னை மேயர் ஆர். பிரியா வாழ்த்து பெற்றார்.
சென்னை மாநகராட்சி மேயராக ஆர். பிரியா கடந்த ஆண்டு மார்ச் 4 ஆம் தேதி பொறுப்பேற்றார். மேயர் தேர்தலில் அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாத நிலையில் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
மிகவும் இளம்வயது மேயர், சென்னையின் முதல் பட்டியலின பெண் மேயர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
இந்நிலையில் மேயர் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி, சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இதையும் படிக்க | 6 மாதங்களுக்குப் பின் திருச்சி காவிரி பாலம் திறப்பு!