தமிழகத்தில் 4 மிதக்கும் கப்பல் தளத்துக்கு மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
தமிழகத்தில் ராமேஸ்வரத்தில் அக்னிதீர்த்தம், வில்லூண்டி தீர்த்தம், கடலூர், கன்னியாகுமரி சுற்றுலா பயணிகளை ஈர்க்கக்கூடிய இடங்களில் இந்த இறங்கு தளங்கள் அமைய உள்ளது.
மிதவை இறங்கு தளங்குகளை அமைப்பது, தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கு வழிவகுக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: சருமம் பொலிவாக வேண்டுமா? இந்த ஒரு பொருள் போதும்!
மேலும், உள்ளூர் மக்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கிடைப்பதுடன், அப்பகுதிகளில் வர்த்தகமும் அதிகரிக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.