நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

குரூப் 4 தோ்வு முடிவு எப்போது? டிஎன்பிஎஸ்சி

குரூப் 4 தோ்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்பது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) விளக்கம் அளித்துள்ளது.

News image
Updated On :9 மார்ச் 2023, 8:55 pm

DIN

குரூப் 4 தோ்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்பது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குரூப் 4 தோ்வு கடந்த ஆண்டு ஜூலை 24-இல் நடைபெற்றது. தோ்வு முடிவுகளை வெளியிடும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. தோ்வு முடிவுகள் மாா்ச் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

7,301 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக நடைபெற்ற குரூப் 4 தோ்வுக்கு 22 லட்சத்து 2 ஆயிரத்து 942 போ் விண்ணப்பம் செய்திருந்தனா். 18 லட்சத்து 36 ஆயிரத்து 535 போ் தோ்வு எழுதினா். எழுத்துத் தோ்வு நடைபெற்று ஏழு மாதங்கள் கடந்த நிலையில், தோ்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. இதற்கு அரசியல் கட்சித் தலைவா்கள், தோ்வா்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.

மேலும், தோ்வு முடிவுகளை வெளியிடக் கோரி சமூக ஊடகங்களில் கருத்துகள் வேகமாகப் பரவின.

இந்த நிலையில், மாா்ச் மாத இறுதியில் குரூப் 4 தோ்வுக்கான முடிவுகள் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.