
வெளிநாட்டு சிகரெட் லைட்டர்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் நலத் துறை அமைச்சர் வெ.கணேசன் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் வெளிநாட்டு சிகரெட் லைட்டர்களால் தமிழ்நாட்டில் தீப்பெட்டி உற்பத்தி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது என்றும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்நிலையில், தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் நலவாரிய கூட்டத்தில் பங்கேற்று பேசிய அமைச்சர் வெ. கணேசன், தமிழ்நாட்டில் சட்டவிரேதமாக விற்பனை செய்யப்படும் வெளிநாட்டு சிகரெட் லைட்டர்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.
சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் சிகரெட் லைட்டர்கள் மீது பொட்டலப் பொருள்கள் விதிகளின் கீழ் சிறப்பு குழுக்கள் அமைத்து பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், தீப்பெட்டி உற்பத்தி தொழில் பாதிக்கப்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வெ. கணேசன் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.