திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மார்ச் 22ஆம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில், நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில், முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.
அப்போது மாவட்ட கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.