தமிழ்நாட்டில் ரூ.2,695 கோடி சுங்கச்சாவடி கட்டணம் வசூல்: நிதின் கட்கரி தகவல்

கடந்த நிதியாண்டில் தமிழ்நாட்டில் ரூ.2,695 கோடி சுங்கச்சாவடி கட்டணம் வசூலாகி உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 
மக்களவையில் நிதின் கட்கரி
மக்களவையில் நிதின் கட்கரி


புதுதில்லி: கடந்த நிதியாண்டில் தமிழ்நாட்டில் ரூ.2,695 கோடி சுங்கச்சாவடி கட்டணம் வசூலாகி உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 

சுங்கச்சாவடி குறித்து மக்களவையில் எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விக்கு, மத்திய சாலை போக்குவத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது: 
கடந்த நிதியாண்டில் நாட்டில் உள்ள மொத்த சுங்கச்சாவடிகள் மூலம் ரூ.34,742.56 கோடி வருவாய் கிடைத்துள்ளது. 

இதில், அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் ரூ.4,183 கோடியும், குஜராத்தில் ரூ.3.642 கோடியும், தமிழ்நாட்டில் ரூ.2,695 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது என தெரிவித்தார். 

தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் 4,934 பேர் ஒப்பந்த பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com