மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

லத்தேரியில் எருது விடும் திருவிழா

வேலூர் மாவட்டம் காட்பாடி  அடுத்த லத்தேரி பகுதியில்  எருது விடும் திருவிழா வெகு விமர்சையாக  நடைபெற்றது.

News image
Updated On :3 மே 2023, 5:54 pm IST

வேலூர் மாவட்டம் காட்பாடி  அடுத்த லத்தேரி பகுதியில்  எருது விடும் திருவிழா வெகு விமர்சையாக  நடைபெற்றது.

வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி சித்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 400க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.  ஆந்திரம், தமிழகத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான  மக்கள் எருது விடும் திருவிழாவை காண குவிந்திருந்தனர்.

குறிப்பிட்ட இலக்கினை  குறைந்த நேரத்தில் கடக்கும் காளைகளுக்கு முதல் பரிசாக ரூ.2,00,000, இரண்டாம் பரிசாக ரூ.1,75,000, மூன்றாம் பரிசாக ரூ.1,50,000, நான்காம் பரிசாக ரூ.1,25,000 என 70 பரிசுகள் வழங்கப்பட்டன.

காலை விடும் திருவிழாவில் காளைகள் முட்டியதில்  5 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. எருது விடும் திருவிழாவில் அசம்பாவிகள் ஏதும் நடைபெறாமல் இருக்க லத்தேரி காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.