நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

லத்தேரியில் எருது விடும் திருவிழா

வேலூர் மாவட்டம் காட்பாடி  அடுத்த லத்தேரி பகுதியில்  எருது விடும் திருவிழா வெகு விமர்சையாக  நடைபெற்றது.

News image
Updated On :3 மே 2023, 12:24 pm

DIN

வேலூர் மாவட்டம் காட்பாடி  அடுத்த லத்தேரி பகுதியில்  எருது விடும் திருவிழா வெகு விமர்சையாக  நடைபெற்றது.

வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி சித்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 400க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.  ஆந்திரம், தமிழகத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான  மக்கள் எருது விடும் திருவிழாவை காண குவிந்திருந்தனர்.

குறிப்பிட்ட இலக்கினை  குறைந்த நேரத்தில் கடக்கும் காளைகளுக்கு முதல் பரிசாக ரூ.2,00,000, இரண்டாம் பரிசாக ரூ.1,75,000, மூன்றாம் பரிசாக ரூ.1,50,000, நான்காம் பரிசாக ரூ.1,25,000 என 70 பரிசுகள் வழங்கப்பட்டன.

காலை விடும் திருவிழாவில் காளைகள் முட்டியதில்  5 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. எருது விடும் திருவிழாவில் அசம்பாவிகள் ஏதும் நடைபெறாமல் இருக்க லத்தேரி காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.