மேட்டூர்: தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து வருகிறது.
நேற்று முன்தினம் காலை வினாடிக்கு 1,075கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 3,980கன அடியாகவும் இன்று காலை வினாடிக்கு 6,700கன அடியாகவும் அதிகரித்துள்ளது.
நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் நேற்று முன் தினம் 101.16அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 101.62அடியாக உயர்ந்துள்ளது.
கடந்த இரண்டு நாள்களில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 0.46அடி உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைகளுக்காக வினாடிக்கு 1,500கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட குடிநீருக்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
அணையின் நீர் இருப்பு 66. 95 டிஎம்சியாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பொத்தானை அழுத்தினால் பணம்..! கவனம் ஈர்க்கும் கான் சிட்டி படத் தலைப்பு டீசர்!

கருப்பு படத்தின் தயாரிப்பாளருக்கும் ஆர்.ஜே. பாலாஜிக்கும் சண்டையா?

ஈரான் போர்! குவைத் மீதான தாக்குதலில் 61 வீரர்கள் படுகாயம்!

அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான ப்ளூ பிரிண்ட்! - ஸ்டாலினின் 14 முக்கிய அம்சங்கள்!!
வீடியோக்கள்

திருநள்ளாற்றில் சனிப் பெயர்ச்சி விழா! | Temple | ஆன்மிகம்
தினமணி வீடியோ செய்தி...

எங்களை வைத்துதான் காங்கிரஸ் கூடுதல் சீட் பெற்றார்கள்!: செங்கோட்டையன் | TVK | Vijay
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 8 முதல் 14 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Podcast | செல்வப்பெருந்தகை சந்தித்த சவால்கள் | News and Views | Epi - 11
தினமணி வீடியோ செய்தி...

