திராவிட மாடல் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியொன்றில், திராவிட மாடல் குறித்து கடுமையாக விமரிசித்துள்ளார்.
அதில், 'திராவிட மாடல் என்ற காலாவதியான கொள்கையை வைத்து திமுக ஆட்சி செய்து வருகிறது. அது செத்துப் போன தத்துவம். மேலும் திராவிட மாடல் ஒரே நாடு, ஒரே கொள்கைக்கு எதிரானது' என்று பேசியுள்ளார்.
இதற்கு பதில் அளித்துள்ள மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், 'திராவிட மாடல் செத்துப் போன தத்துவம், மார்க்சியம் இந்தியாவை சிதைத்துவிட்டது, பரிணாமக்கோட்பாடு மேற்கத்திய அடிமைத்தனம்' என்று சொல்லும் ஆளுநர் அவர்களே!
களைகளுக்கு கோடாலிகள் மீது கோபம் வருவது இயற்கைதான் என்பதை நாங்கள் அறிவோம். உங்கள் கோபத்தை ரசிக்கிறோம்.' என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.