ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சேலம் அருகே கார் மீது லாரி மோதி விபத்து!

சேலம் கருப்பூர் பொறியியல் கல்லூரி அருகே கிருஷ்ணகிரியில் இருந்து கேரளாவிற்கு நண்பர்களுடன் சுற்றுலா சென்ற கார் - டிப்பர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. 

News image
Updated On :5 மே 2023, 8:44 am

DIN

சேலம் கருப்பூர் பொறியியல் கல்லூரி அருகே கிருஷ்ணகிரியில் இருந்து கேரளாவிற்கு நண்பர்களுடன் சுற்றுலா சென்ற கார் - டிப்பர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. 

கிருஷ்ணகிரி மாவட்டம் நாட்றம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கிரிஸ்டோபர் மற்றும் பெரியநாயகம் மற்றும் ஓசூர் பகுதியைச் சேர்ந்த பிரதீப் மற்றும் இரண்டு நண்பர்கள் என ஐந்து நபர்கள் கேரளத்திற்கு சுற்றுலா செல்வதற்காக கிருஷ்ணகிரியில் இருந்து காரில் சென்றுள்ளனர். 

சேலம் மாவட்டம் கருப்பூர் இன்ஜினியரிங் கல்லூரி அருகே பெங்களூரு சேலம் தேசிய நெடுஞ்சாலையில் டிப்பர் லாரியை முந்த முயன்ற போது டிப்பர் லாரி, கார் மீது மோதி கார் நசுங்கி விபத்துக்குள்ளானது.

இதில் கிறிஸ்டோபர் மற்றும் பெரியநாயகம் இருவரும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கிறிஸ்டோபருக்கு உடல் பாகம் சிதறி நிலையில் மீட்கப்பட்டுள்ளார். மேலும், காரில் பயணித்த மூன்று நபர்கள் சிறு காயத்துடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக கருப்பூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நண்பர்களுடன் கேரளா சுற்றுலா செல்ல வந்தவர்கள் விபத்துக்குள்ளாகி இருவர் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.